
நமது கோவையை சார்ந்த மாணவி மெஹராஜ்
சுபஹான்பாஷா (Meharaj Subahan) வலுதூக்கும் போட்டிகளில் தேசிய அளவில் கலந்து கொண்டு கோவைக்கும் மற்றும் நம் நாட்டுக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார் .ஜூனியர் பிரிவில் பல பரிசுகளை அள்ளிக் கொண்டு வந்துள்ளார்.
வலு தூக்குவோருக்கு என பிரத்யேக ஆடை உள்ளது.அந்தப் பிரத்தியேக ஆடை இல்லாமல் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார் என்று அறிந்தோம்.
அந்த பிரத்தியேக ஆடை எவ்வளவு என்று விசாரித்த பொழுது புதிய ஆடை சுமார் 1,00,000/- என்றும் இரண்டாம் தர ஆடை சுமார் 60,000 என்றும் தெரியவந்தது.
மெஹராஜ் சுபஹான்பாஷா விசாரித்த பொழுது அவர் இரண்டாம்தர ஆடையே வாங்க விருப்ப படுவதாக கூறினார்.
நாம் அதற்காக நம் நண்பர்கள் அறக்கட்டளையில் இருந்து சுமார் 13,000/- காசோலையாக வழங்கினோம்.
